சர்வதேச குழு: இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களடங்கிய டெனிஷ் நூலின் மீள்பதிப்புக்கு, இஸ்லாமிய கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு (ஐசெஸ்கோ) வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில், இத்தகைய நூலின் மீள்பதிப்பானது, டென்மார்க்கிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கெதிரான டென்மார்க்கின் போக்கையும் எதிர்ப்பையுமே வெளிப்படுத்தும் என ஐசெஸ்கோ தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டென்மார்க் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட இக்கேலிச்சித்திரங்களினால் முஸ்லிம் உலகில் பெரும் அதிருப்தியும் வேதனையும் தோன்றின. இவற்றை மீளவும் ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இந்நூல் வெளியீடு அமையவுள்ளது. இதனால், டென்மார்க் அரசாங்கம், இந்நூல் வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டுமென ஐசெஸ்கோ அவ்வரசாங்கத்தைக் கேட்டுள்ளது.
இது, சமய சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மனித உரிமைப் பிரகடனத்தின் அனைத்து சட்டங்களையும் மீறும் ஒரு செயலாகும்.
இந்நூல், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மட்டுமன்றி, டென்மார்க்கின் பல்வேறு சமூகக் குழுக்களினதும் சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அதன் உள்ளகச் சட்டத்தையும் மீறுகின்றது என ஐசெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment