RSS

Monday, 11 October 2010

தெலுங்கானா மாநிலம் அமைந்தால் முஸ்லீம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு;

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலை வரும் முன்னாள் மத்திய மந்திரி யுமான சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதற்கு விரைவில் வெற்றி கிடைக்க இருக்கிறது. தெலுங்கானா மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தனி மாநிலத்தை நிச்சயம் பெற முடியும்.
 
தெலுங்கானா பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இதனால் தெலுங்கானா மாநிலம் அமைந்ததும் முஸ்லிம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும்.
 
அவர்களுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.
 
இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

No comments:

Powered by Blogger.