குர்ஆன் செயற்பாட்டுக் குழு: சவூதியின் சைஹத் நகரிலுள்ள, பைத்துல் குர்ஆன் எனும் பெண்களுக்கான நிலையம், எதிர்வரும் கல்வியாண்டில் பல்வேறு குர்ஆனிய கற்கைகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
முஸ்ன் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் தெரிவிப்பதாவது, இந்நிகழ்ச்சியானது குர்ஆனிய வசனங்களிலான சட்டவியல் மற்றும் குறுகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரைகள் என்பவற்றுக்கான ஒரு மாதக் கற்கைகளையும், குர்ஆன் ஓதல் மற்றும் தஜ்வீத் என்பவற்றுக்கான இரு மாதக் கற்கைகளையும் உள்ளடக்கியுள்ளது.
ரியாசுல் குர்ஆன் எனும் தலைப்பில் சிறார்களுக்கான விசேட குர்ஆனியக் கற்கையொன்றை நடத்தவும் இந்நிலையம் திட்டமிட்டுள்ளது. மூன்று மாத அளவைக் கொண்ட இக்கற்கை, சிறார்களை குர்ஆன் மனனத்துடனும் குர்ஆன் ஓதலுடனும் பரிச்சயமாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
மற்றொரு நிகழ்ச்சி, குர்ஆனியக் கல்வி தொடர்பான ஒரு வருட கற்கையாகும். இதில் கலந்து கொள்வோருக்கு கற்கைநெறியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
கற்கைகளுக்கான பதிவு, செப்டம்பர் 29 தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment