RSS

Saturday, 9 October 2010

சிரியாவில், 'மிகச் சிறந்த அதான் கூறல்' போட்டி

சர்வதேச குழு: சிரியாவின் ஹலப் நகரிலுள்ள மஸ்ஜிதுகளுக்கு சிறந்த முஅத்தின்களைத் தெரிவு செய்யும் நோக்கில், அங்குள்ள நிதிவள அலுவலகம் சிறந்த அதான் கூறல் போட்டியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இப்போட்டிக்கான பதிவு அக்டோபர் 9ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும் என அல்அன்பா செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

3 மில்லியன் மக்கட் தொகையைக் கொண்ட மிகப் பெரிய நகர் என்ற வகையில், ஹலப் நகர், ஷஹ்ரே ஹஷார் மஸ்ஜித் (ஆயிரம் மஸ்ஜிதுகளுள்ள நகரம்) என அழைக்கப்படுகின்றது.
சவ்த், லஹ்ன் மற்றும் மெல்லிசை என்பவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த நடுவர் குழுவினரால், சிறந்த அதான் கூறல் தெரிவு செய்யப்படும்.

ஹலப் நகரிலுள்ள சுமார் 500 முஅத்தின்கள், இந்த அதான் முறைமைகளுடன் பரிச்சயமற்றும் அதான் கூறலுக்குத் தகுதியற்றும் இருப்பதாக அறிக்கையொன்று கூறுகின்றது.

இதன் காரணமாகவே இப்போட்டி நிகழ்ச்சி ஹலப் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Powered by Blogger.