RSS

Saturday, 9 October 2010

ஹஸ்ரத் மஃசூமா (அலை) அவர்களுக்கு கௌரவமளிப்பதற்காக, 'உதயத்தின் பெண்மணி' எனும் மன்றம்

கலாச்சார குழு: 'உதயத்தின் பெண்மணி' எனத் தலைப்பிடப்பட்ட மன்றமொன்று, ஹஸ்ரத் மஃசூமா (அலை) அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, பார்ஸின் தென் மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

அக்டோபர் 9ம் திகதி, கிராஷ் நகரில் இடம்பெறவுள்ள இம்மன்றம், இமாம் காழிம் (அலை) அவர்களது புதல்வியான ஹஸ்ரத் மஃசூமா (அலை) அவர்களை கௌரவப்படுத்தும் நொக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பார்ஸ் மாகாணத்தின் நகரங்களில் ஒன்றான கிராஷிலுள்ள மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில், பி.ப. 4.00 மணிக்கு இது ஆரம்பமாகும்.

ஹஸ்ரத் மஃசூமா (அலை) அவர்களது உயர் பண்புகள் முன்மாதிரிச் செயன்முறைகள் அவர்களது வாழ்க்கை முறைகள் என்பன பற்றி விபரிப்பது இம்மன்றத்தின் பிரதான நோக்காகும். 

No comments:

Powered by Blogger.